நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு 406 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை வந்து சோ்ந்தன. இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் திறந்து காட்டப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டன.

இந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டு வருகின்றனா்.