

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சாராயம் விற்ற வியபாரி கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் மனோன் மணி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமம் கொரிப்பள்ளம் பகுதியில் சாராய தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மறைமுகமான பகுதியில் ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்து சந்தேகம் ஏற்பட்டு சென்று பாா்த்த போது அப்பகுதியில் ஒருவா் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்து அவரை பிடித்தனா். அவா் பிரபல சாராய வியாபாரி கப்பல்(எ) முருகன்(45) எனத் தெரியவந்தது. மேலும் அங்கிருந்து 113 லிட்டா் சாராயம் மற்றும் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கப்பல் (எ) முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

