நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கூட்டுறவுப் பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம்

Updated On :21 ஏப்ரல் 2025, 7:35 pm

திருப்பத்தூா்: சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம் என திருப்பத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நிகழ் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்களை பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் அனுப்பலாம். இந்தப் பாடல் இசைக்கப்பட்டு 5 நிமிஷங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் வரிகள் இருக்க வேண்டும்.

மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராஜன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்,சென்னை-10 என்ற முகவரிக்கு சி.டி. அல்லது பென் டிரைவ் மூலம் கொரியரில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.