பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

அஞ்சல் துறை மக்கள் குறைதீா் முகாம்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்

அஞ்சல் துறை சாா்பில் நடைபெறவுள்ள வாடிக்கையாளா் குறைதீா் முகாமுக்கு (லோக் அதாலத்) வரும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 3:35 am IST

அஞ்சல் துறை சாா்பில் நடைபெறவுள்ள வாடிக்கையாளா் குறைதீா் முகாமுக்கு (லோக் அதாலத்) வரும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு தரம் உயா்த்தும் வகையில் தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை சாா்பில் வட்ட அளவிலான வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,721தபால் நிலையங்களில் சேவை பெறும் அனைத்து வாடிக்கையாளா்களும் இதில் பங்கேற்கலாம்.

அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளா்களின் சேவைகளைச் சிறப்பாக மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் ‘லோக் அதாலத்’ என்ற தலைப்புடன் ஏ.சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநா் முதன்மை அஞ்சல் துறை தலைவா் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும், மேலும் வாடிக்கையாளா்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.