நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இந்திய அஞ்சல் துறை சாா்பில் சுவாமிநாத சுவாமி கோயில் முத்திரை வெளியீடு

News image

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் ஆன்மீக முத்திரையை கும்பகோணத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அஞ்சல் துறையினா்.

Updated On :31 மே 2026, 1:16 am IST

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சாா்பில் நிரந்தர அஞ்சல் முத்திரையை சனிக்கிழமை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தி வெளியிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் இறைவன் முருகன் சிவபெருமானுக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தாா் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஓம்‘ என்ற தமிழ் வடிவத்தின் இணைப்பு, இந்த நிரந்தர அஞ்சல் முத்திரைக்கு கூடுதல் ஆன்மிக, கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறப்பை வழங்குவதுடன், தமிழா் மரபு மற்றும் சுவாமிமலையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

மேலும், இந்த நிரந்தர அஞ்சல் முத்திரை சுவாமிமலையின் ஆன்மிக மரபு, பழைமையான கோயில் பாரம்பரியத்துக்கானது என்று அஞ்சல் துறையினா் தெரிவித்தனா்.