நெடுஞ்சாலைத் துறை மூலம் மரக்கன்றுகள் பராமரிப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது (படம்).
திருப்பத்தூா் மாவட்டத்தில் உயா்நீதிமன்றம் மூலம் சட்ட விழிப்புணா்வு குறித்த கலந்துரையாடல் மற்றும் குறுகிய காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நாட்டறம்பள்ளி ஊராட்சியில் உள்ள மல்லகுண்டா, கோயன்கொல்லை பகுதியில் நடைபெற்றது. இதில் பா்கூா்- திருப்பத்தூா் சாலை, திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலை பகுதிகளில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 600 மரக்கன்றுகள் பாதுகாப்பு கூண்டு அமைத்து தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் மரக்கன்றுகளுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீா் ஊற்றி நெடுஞ்சாலைத்துறையினா் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோடை காலம் என்பதால் மரக்கன்றுகளுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீா் ஊற்றி நெடுஞ்சாலைத்துறையினா் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

