இந்திய அஞ்சல் துறையின்கீழ் இயங்கும் பெங்களூருவில் உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் வாகன பராமரிப்பு பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
பணி: MV.Mechanic (Skilled)
காலியிடம் : 1
பணி: Upholster (Skilled)
காலியிடம்: 1
பணி: Carpenter cum Jointer (Skilled)
காலியிடம் : 1
பணி: Painter (Skilled)
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ.19,900-63,200
தகுதி: Mechanic, Motor Vehicle Mechanic, Upholstery,Carpenter,Carpenter cum Jointer, Painter போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு, டிரேடு வாரியான தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்ரிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இரண்டு இணைத்து “The Manager, Mail Motor Service, Bengaluru-01”என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
APPLICATIONS ARE INVITED FOR THE YEAR 2025-2026 FROM THE ELIGIBLE INDIAN CITIZEN FOR THE FOLLOWING TRADES
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











