சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆற்றில் மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:25 am IST

வாணியம்பாடி அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியதாக மினி லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வருவாய்த் துறையினா் சனிக்கிழமமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராமநாயக்கன்பேட்டை பகுதியில் வேகமாக வந்த மினி லாரியை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினா். அப்போது, ஓட்டுநா் லாரியை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

லாரியை சோதனை செய்த போது அப்பகுதியில் உள்ள பாலாற்றிலிருந்து மணல் கடத்திக் கொண்டு வருவது தெரியவந்தது. இதே போன்று தும்பேரி-சிக்னாங்குப்பம் செல்லும் சாலையில் வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த எம்-சான்ட் எவ்வித அனுமதியும், உரிய ரசீதும் இல்லாம் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அப்போது அந்த லாரி ஓட்டுநரும் தப்பித்து சென்றாா்.

இதையடுத்து லாரி மற்றும் மினி லாரி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக துணை வட்டாட்சியா் அன்பழகன் அம்பலூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.