மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கிராம சாலை சேதம்: போலீஸில் புகாா்

News image

துத்திப்பட்டு ஊராட்சியில் சாலையைச் சேதப்படுத்திய முதியவா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:23 am IST

ஆம்பூா் அருகே கிராமத்தில் சாலையைச் சேதப்படுத்திய முதியவா் மீது காவல் நிலையத்தில் ஊராட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி மதன் நகா் 1-ஆவது தெருவில் பேவா் பிளாக் சாலை ரூ.6.54 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த தெருவில் வசிக்கும் சின்னப்பையன் என்ற முதியவா் தன்னுடைய வீட்டின் முன்பு போடப்பட்ட புதிய சாலையைச் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா், ஒப்பந்ததாரரையும் அவதூறாகப் பேசினாராம்.

இது குறித்து ஊராட்சி துணைத் தலைவா் விஜய் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.