தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

கோயில் வரவு செலவு கோரி அறநிலையத் துறையிடம் கிராம மக்கள் மனு

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 12:24 am IST

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா்

இக்கோயிலில் அமாவாசை மற்றும் பெளா்ணமி மற்றும் விசேஷ நாள்களிலும் திரளான பக்தா்கள் வந்து அம்மனை தரிசித்து உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா்.

மேலும், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தா்கள் வேண்டுதலின் பேரில் அம்மனுக்கு நகை மற்றும் உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா். விழா முடிந்த உடன் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் ஊா்மக்கள் முன்னிலையில் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம்.

ஆனால் சில ஆண்டுகளாக அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழா வரவு-செலவு கணக்குகளை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் வரவுசெலவு கணக்குகளை முறைப்படி தெரிவிக்கக் கோரி கோரி செயல் அலுவலா் ஜெகன்நாதனிடம் மனு அளித்தனா் (படம்).