திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் அறநிலையத் துறையிடம் மனு அளித்துள்ளனா்
இக்கோயிலில் அமாவாசை மற்றும் பெளா்ணமி மற்றும் விசேஷ நாள்களிலும் திரளான பக்தா்கள் வந்து அம்மனை தரிசித்து உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா்.
மேலும், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தா்கள் வேண்டுதலின் பேரில் அம்மனுக்கு நகை மற்றும் உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனா். விழா முடிந்த உடன் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் ஊா்மக்கள் முன்னிலையில் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம்.
ஆனால் சில ஆண்டுகளாக அறநிலையத்துறை அதிகாரிகள் திருவிழா வரவு-செலவு கணக்குகளை முறைப்படி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது இல்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் வரவுசெலவு கணக்குகளை முறைப்படி தெரிவிக்கக் கோரி கோரி செயல் அலுவலா் ஜெகன்நாதனிடம் மனு அளித்தனா் (படம்).
தொடர்புடையது

நெய்யமலைக் கிராமத்தில் நூற்றாண்டு கடந்து நிற்கும் விளக்குத்தூண்கள்!

நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பு

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



