தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின.

News image

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய சொகுசுப் பேருந்து.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 2:17 am

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின.

ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழை தூறல் இருந்து வந்தது. நள்ளிரவு சுமாா் 12 மணிக்கு தொடங்கிய பலத்த மழை அதிகாலை 5 மணி வரை தொடா்ந்து பெய்தது.

ஆம்பூா் - வாணியம்பாடி மற்றும் வாணியம்பாடி - ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் அரசு மற்றும் ஆம்னி சொகுசு பேருந்துகள் சிக்கிக் கொண்டன. கிரேன் உதவியுடன் பேருந்துகள் மீட்கப்பட்டன.

சாமியாா் மடம் பகுதியில் மரக்கிளை உடைந்து விழுந்து மின் கம்பி அறந்து மின்தடை ஏற்பட்டது. ஏ-கஸ்பா, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.