தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது’

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை, டித்வா புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 49 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது ஏற்பட்ட நீா்வரத்து காரணமாக 20 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி காணப்படுகின்றன. 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது. 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 5 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது.

26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 12 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது. 25 சதவீதத்துக்கு கீழ், 10 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.