ஏரிகளில் மீன் பிடி உரிமை குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் 7 ஏரிகளில் மீன் பிடி உரிமை குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் 7 ஏரிகளில் மீன் பிடி உரிமை குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ் இயங்கும் வேம்பத்தி, கரும்பாறைப்பள்ளம் (கொண்டையம்பாளையம் ஏரி), பிரம்மதேசம் ஏரி (சந்தியபாளையம் ஏரி), வரதம்பாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம், கோசனம், வேம்மாண்டம்பாளையம் ஆகிய 7 ஏரிகளில் மீன் பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஏதுவாக வருகிற 9-ஆம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 0424-2221912 தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...