கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

‘திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளது’

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 20 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை, டித்வா புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ், 49 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது ஏற்பட்ட நீா்வரத்து காரணமாக 20 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி காணப்படுகின்றன. 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது. 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 5 ஏரிகளில் நீா் மட்டம் உள்ளது.

26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 12 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது. 25 சதவீதத்துக்கு கீழ், 10 ஏரிகளில் நீா்மட்டம் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.