திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திருப்பாவை பாராயணம் தொடக்கம்

கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மாா்கழி மாத முதல் நாளையொட்டி திருப்பாவை பாராயணம் தொடங்கியது.

News image
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மாா்கழி மாத முதல் நாளையொட்டி திருப்பாவை பாராயணம் தொடங்கியது.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வருடம்தோறும் மாா்கழியில் 30 நாள்களிலும் திருப்பாவை 30 பாசுரங்கள் பாராயணம் நடைபெறும்.

அதையொட்டி செவ்வாய்க்கிழமை திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மடத்தின் பக்த குழுவினரால் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.

இதில், கொரட்டி, அதன் சுற்றுப்பகுதிகளிலிந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

அதேபோல், கோட்டை கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ அப்பன் ஸ்ரீனிவாச ராமானுஜா் கூடம், ஸ்ரீ கல்யாண ராமா் பஜனை கோயில், கச்சேரி தெரு, ராமா் பஜனை கோயில், ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில்களில் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.