விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் கடத்தப்பட்ட 74 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸாா் வெலகல்நத்தம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா் பைக்கிலிருந்த மூட்டையை சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், கூலீப் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில் சந்திரபுரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சீனிவாசன்(50) என்பதும் இவா் போதைப் பொருள்களை நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், கொத்தூா், பச்சூா், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து 74 கிலோ போதை பொருள்களை தனிப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.