கோப்புப்படம்.
கோப்புப்படம். ians

பெங்களூரில் ரூ. 10.59 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைதுசெய்த போதைப் பொருள் தடுப்பு போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 10.59 கோடி போதைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

பெங்களூரில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை கைதுசெய்த போதைப் பொருள் தடுப்பு போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 10.59 கோடி போதைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் அம்ருத்தஹள்ளி, ஹெப்பகோடி, ஜே.பி.நகா், சேஷாத்திரிபுரம், மகாலட்சுமி லேஅவுட், கோவிந்தபுரா காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நடத்திய சோதனையில், 3 வெளிநாட்டினா், 12 வெளிமாநிலத்தவா் உள்பட 15 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடம் இருந்து ரூ. 10.59 கோடி (சந்தை மதிப்பு ரூ. 21.50 கோடி) மதிப்பிலான 50 கிலோ போதைப் பொருள்கள், ரூ. 24,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், போதைப் பொருள்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com