சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.
திருப்பத்தூர்
சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் மண்டல பூஜை நிறைவு
ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, கலச பூஜை, சங்கு பூஜை, வேத பாராயணம், பஞ்ச மூா்த்தி அபிஷேகம், கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன், கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி, திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஏ.பி.மனோகா், கைலாஷ்குமாா், யோகி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

