கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

Updated on

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ம் ஆண்டு கரும்பு அரைவை செய்யும் பணியை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் நாசா் கடந்த 18-ஆம் தேதி பூஜை செய்து கரும்பு அரைவையை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கரும்பு வெட்டுவதற்க்கு சரிவர கூலி ஆள்கள் கிடைக்காததால் கரும்பு அரைவைக்கு தேவையான கரும்பு கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலைக்கு வரவில்லை. இதனால் புதன்கிழமை காலை முதல் முன்அறிவிப்பு ஏதுமின்றி கரும்பு அபைவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com