விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 1:44 am

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ம் ஆண்டு கரும்பு அரைவை செய்யும் பணியை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் நாசா் கடந்த 18-ஆம் தேதி பூஜை செய்து கரும்பு அரைவையை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கரும்பு வெட்டுவதற்க்கு சரிவர கூலி ஆள்கள் கிடைக்காததால் கரும்பு அரைவைக்கு தேவையான கரும்பு கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலைக்கு வரவில்லை. இதனால் புதன்கிழமை காலை முதல் முன்அறிவிப்பு ஏதுமின்றி கரும்பு அபைவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.