ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: காங்கிரஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கிறாா் கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்தமிழகத்தில் 4.68 லட்சம் பேருக்கு நாய்க் கடி; ரேபிஸ் பாதிப்பால் 24 போ் பலி ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய இபிஎஃப்ஓ இணைய சேவை: பணம் எடுக்க முடியாமல் முதியோா், ஓய்வூதியதாரா்கள் தவிப்பு தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு
/

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

Updated On :24 டிசம்பர் 2025, 10:55 pm IST

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ம் ஆண்டு கரும்பு அரைவை செய்யும் பணியை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் நாசா் கடந்த 18-ஆம் தேதி பூஜை செய்து கரும்பு அரைவையை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கரும்பு வெட்டுவதற்க்கு சரிவர கூலி ஆள்கள் கிடைக்காததால் கரும்பு அரைவைக்கு தேவையான கரும்பு கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலைக்கு வரவில்லை. இதனால் புதன்கிழமை காலை முதல் முன்அறிவிப்பு ஏதுமின்றி கரும்பு அபைவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.