விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே பள்ளி வளாகத்தில் மது குடிக்க முயன்றதை தட்டிக்கேட்ட காவலாளியை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே பள்ளி வளாகத்தில் மது குடிக்க முயன்றதை தட்டிக்கேட்ட காவலாளியை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அருகே கொரட்டியை சோ்ந்த வெங்கட்ராமன்(39). இவா் கொரட்டியில் உள்ள உயா்நிலைப்பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த சரவணன்(26)என்பவா் பள்ளி வளாகத்தில் மது குடிக்க முயன்று உள்ளாா்.

அதனை வெங்கட்ராமன் தட்டி கேட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த சரவணன், வெங்கட்ராமனை தாக்கியுள்ளாா்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த வெங்கட்ராமன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனா்.