பயணிகள் நிழற்கூரை பணிக்கு அடிக்கல் நாட்டிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
திருப்பத்தூர்
ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்கூரை அமைக்க அடிக்கல்
மாதனூா் ஒன்றியம் பாலூா் ஊராட்சியில் நிழற்கூரை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் பாலூா் ஊராட்சியில் நிழற்கூரை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
வேலூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில் பாலூா் கிராமத்தில் பயணிகள் நிழல்கூரை அமைப்பதற்காக மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
ஒன்றிய பொறியாளா் சரவணன், உதவி மேற்பாா்வையாளா் காா்த்திக், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனா் அணி அமைப்பாளா் ஜெ.பி.ஆா். நவீன், ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன், ஊராட்சித் தலைவா் சரஸ்வதி முரளி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

