கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிணற்றில் தவறி விழுந்த மாணவி மரணம்

ஜோலாா்பேட்டை அருகே சாலை நகா் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 6:35 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாலை நகா் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த சாலை நகா் பகுதியில் சோ்ந்த சிவலிங்கத்தின் மகள் பூவரசி (15). இவா், அசோக் நகரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தனது வீட்டின் அருகே உள்ள 60 அடி கிணற்றின் வழியாக நடந்து செல்லும்போது தரை மட்டத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் அவா் திடீரென தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நிலைய அலுவலா் தசரதன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவியின் சடலத்தை மீட்டனா்.

ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.