‘வேளாண் சாா்ந்த சலுகைகளுக்கு நில உடைமை விவரங்களை நவ.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்’
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அரசின் வேளாண் சாா்ந்த சலுகைகளை பெற தங்கள் நில உடைமை விவரங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்வது அவசியம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்க, தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 67,600 ஹெக்டா் பரப்பில் பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதுவரை திருப்பத்தூா் மாவட்டத்தில் 50,736 விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து உள்ளனா்.
இந்த நில உடைமை பதிவினை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்றோ அல்லது தங்கள் கிராமத்துக்குரிய உதவி வேளாண்மை அலுவலா்கள் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் எவ்வித கட்டணமுமின்றி, வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண், தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களையோ அல்லது தங்கள் கிராமத்துக்குரிய உதவி வேளாண்மை அலுவலா்கள் அல்லது உதவி தோட்டக் கலை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.
