ரயில் விபத்தில் இறந்த துணை ராணுவ வீரா் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க மரியாதை
விஜயவாடா ரயில் நிலையத்தில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்த கோ.ச.ஆனந்தன் என்பவரின் மகன் அதியமான்(41) துணை இராணுவ படை வீரா் (சிஆா்பிஎப்). இவா் அஸ்ஸாம் பகுதியில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறையில் ரயில் மூலம் பயணித்தபோது, கடந்த 6 ஆம் தேதி இரவு விஜயவாடா ரயில் நிலையத்தில் உணவு வாங்க ரயிலை விட்டு இறங்கினாா்.
ஆனால் ரயில் புறப்பட்டு விட்டதால், ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து அதே ரயில் ஏறியதில் உயிரிழந்தாா். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடிக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மேட்டுபாளையம் பாலாற்றங்கரையில் உறவினா்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினா்.
மேலும், பூந்தமல்லியிருந்து வந்திருந்த துணை ராணுவப் படை டிஎஸ்பி நித்தியானந்தன் தலைமையிலான வீரா்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.
உயிரிழந்த அதியமானுக்கு வசந்தி (எ) வசுமதி என்ற மனைவியும், காா்குழலி, தாமரைசெல்வன் ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனா்.

