மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரூ.1.67 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வாகனங்கள்

News image
Updated On :13 நவம்பர் 2025, 12:29 am

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகராட்சி புதை சாக்கடை திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீா் புதை சாக்கடைகள் மூலம் ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அந்த கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கும், புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கும் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1.67 கோடியில் 6 வாகனங்கள் ஆம்பூா் நகராட்சி சாா்பாக வாங்கப்பட்டுள்ளது. அவற்றை நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் முத்துசாமி, இளநிலை பொறியாளா் சண்முகம், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.