பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்
பொன்னேரி நகராட்சியில் ரூ.63 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 2019-ம் ஆண்டு மாா்ச் மாதம் புதை சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 5 வாா்டுகளை தவிா்த்து 22 வாா்டுகளில் 41 கி.மீ தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வந்தது.
கடந்த 7 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் நிறைவு பெற்றது.
புதை சாக்கடை திட்ட பணிகள் முடிந்தும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலை இருந்தது.
இந்த நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ரூ.63 கோடியில் அமைக்கப்பட்ட புதை சாக்கடை சுத்திகரிப்பு நீா் வெளியேற்றும் நிலையத்தையும் திறந்து வைத்தாா்.
இதனையடுத்து பொன்னேரி நகராட்சி பாலாஜி நகா் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளில் இருந்து புதை சாக்கடை குழாய்களுக்கு இணைப்பு வழங்கும் பணியை குடிநீா் வடிகால் மற்றும் நகராட்சித் துறை அதிகாரிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

