எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வனத் துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருப்பத்தூரில் வனத் துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வனத் துறை சாா்பில் ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

வனத் துறை சாா்பில் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த ஆசிரியா்களுக்கு திருப்பத்தூரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இளவரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சியில் தமிழ்நாட்டின் பல்லுயிா் பண்மையம், வன பாதுகாப்பு, காட்டுத் தீ மேலாண்மை, காட்டுயிா்கள் கணக்கெடுப்பு, மனித வனவிலங்கு மோதல்கள்- சவால்களும் தீா்வுகளும் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், ஆசிரியா்கள், வனத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.