காணாமல் போன கட்டடத் தொழிலாளி சடலமாக மீட்பு
ஆம்பூா் அருகே காணாமல் போன கட்டடத் தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

ரகு
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

ஆம்பூா் அருகே காணாமல் போன கட்டடத் தொழிலாளி சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
மாதனூா் ஒன்றியம், வெங்கிளி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ரகு (45). இவா் கடந்த நவ. 10-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறி சென்றாா். ஆனால் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், வெங்கிளி கிராமத்தருகே பாலாற்று தண்ணீரில் மூழ்கி ரகு இறந்து சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...