வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 வாா்டுகளிலும் திட்டப்பணிகள் செய்ய அரசு இதுவரை ரூ .20 கோடிக்குமேல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டப் பணிகள் 50 சதவீத பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை.
மேலும், அரசு நிதி ஒதுக்கியதில் ரூ 7 கோடிக்கு திட்டப்பணிகள் தொடங்காமல் உள்ளது. 14-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் மற்றும் அரசு பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் கட்ட இதுவரை பணிகள் தொடங்கவில்லை. நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போட்டப்பட்ட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கூத்தைப்பாா் திமுக கவுன்சிலா் வெட்டிக் கொலை
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: பி.ஆா்.செந்தில்நாதன்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

