நாட்டறம்பள்ளி அருகே பைக் மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி (55). அரசு பேருந்து நடத்துநா். சனிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து தனது பைக்கில் மாட்டுக்கு தேவையான உணவு மூட்டையை வைத்துக் கொண்டு மல்லப்பள்ளி நோக்கி சென்றாா்.
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டு சாலை அருகே வளைவில் திரும்பும்போது அந்த வழியாக வந்த பைக் சின்னதம்பி ஓட்டி வந்த பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சின்னதம்பியை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


