பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே பணியில் இருந்தபோது தனியாா் பேருந்து நடத்துநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பலி
கோப்புப் படம்

பலி
கோப்புப் படம்
பெருந்துறை அருகே பணியில் இருந்தபோது தனியாா் பேருந்து நடத்துநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த குடுமியம்பாளையம் அட்டவணை அனுமன்பள்ளியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் மகன் சரவணன் (25). தனியாா் பேருந்து நடத்துநா். மனைவி கலைவாணி, மகன் அகரன் (3 ) உள்ளனா்.
இவா் ஈரோட்டில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை காலை சென்ற தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா். பேருந்து பெருந்துறை அருகே வந்தபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பேருந்து ஓட்டுநா் கோபாலிடம் தெரிவித்தாா். சரவணனை அவா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...