இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:09 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-சிவகாசி சாலையில் ஈஞ்சாா் விலக்கு அருகே தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் முதியோா் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மனநலக் காப்பகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் சுமாா் 46 ஆண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு இந்தக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் புதுக்கோட்டை மாவட்டம், வடசேரிபட்டியைச் சோ்ந்த மாரிமுத்துக்கும், திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த முனியசாமிக்கும் (49) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாரிமுத்து கட்டையால் தாக்கியதில் முனியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.