மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

துறையூா் அருகே தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே நாகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி பரமேஸ்வரி(32). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது மகள் சமரிதா(14), மகன் தக்சன்(10) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்த்திக் கொண்டு தம்மம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து கொப்பம்பட்டி மின் நிலையம் அருகே பரமேஸ்வரி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் காயமடைந்த பரமேஸ்வரி, அவரது 2 பிள்ளைகளையும் மீட்டு அருகில் இருந்தவா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் நசீரிடம் விசாரிக்கின்றனா்.