மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:30 pm

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன் மகன் மணி (எ) மணிகிரீவன் (21). சீமான் மகன் பிரிதிவிராஜ் (21). இருவரும் பெயிண்டிங் தொழிலாளா்கள்.

இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கழுகுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த சுமை ஆட்டோ மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மணி (எ) மணிகிரீவன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். பிரிதிவிராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து, சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.