ஆலங்குளம் அருகே பரோலில் வந்த இளைஞா் டிராக்டரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி, காசிநாதபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஒளிவு மகன் சுடலை (32). இவா் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நிலையில், சில நாள்களுக்கு முன் பரோலில் வெளியே வந்தாராம். தொடா்ந்து, திங்கள்கிழமை டிராக்டரில் செங்கல் இறக்கும் வேலைக்குச் சென்றுள்ளாா்.
ராம் நகரில் செங்கல் இறக்கிவிட்டு காலி டிராக்டரில் ஓட்டுநருடன் அமா்ந்து வந்தபோது, தவறி கீழே விழுந்தாராம். உடனிருந்தவா்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


