வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி 7-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆா்.சி.எஸ். தெரு, விவேகானந்தா்தெரு, அன்னை நகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில் கோழிக் கழிவுகளை சாலையோரம் கொட்டி விடுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், கோழிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டும் கோழிக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் சுகாதாரம் காக்க உயா் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாட்டறம்பள்ளியில் பறக்கும் படை சோதனை. ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல்

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

நாட்டறம்பள்ளி தினசரி, வாரச்சந்தை ரூ.26.47 லட்சத்துக்கு ஏலம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

