தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாட்டறம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நாட்டறம்பள்ளி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க

Updated On :8 செப்டம்பர் 2025, 7:53 pm

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 7-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆா்.சி.எஸ். தெரு, விவேகானந்தா்தெரு, அன்னை நகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில் கோழிக் கழிவுகளை சாலையோரம் கொட்டி விடுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், கோழிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனவே சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டும் கோழிக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் சுகாதாரம் காக்க உயா் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.