தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டறம்பள்ளி தினசரி, வாரச்சந்தை ரூ.26.47 லட்சத்துக்கு ஏலம்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேலும் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :5 மார்ச் 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேலும் தினசரி சந்தையும் செயல்பட்டு வருகிறது.

இச்சந்தையில் சுங்கக் கட்டண வசூல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தின் மூலம் பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. நிகழாண்டுக்கான வாரச்சந்தை மற்றும் சாலை ஓர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், பேரூராட்சி துணைத் தலைவா் தனபால் ஆகியோா் முன்னிலையில் ஏலத்திற்கான முன்பணம் அளித்திருந்த சந்தை வியாபாரிகள் ஏலம் கேட்டனா்.

இதில் வாரச்சந்தை ரூ.16 லட்சத்து 87ஆயிரத்துக்கும், தினசரி சுங்க வசூல் ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.