திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.
சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பகிரங்கமாக ஏலம் விடப்படுகிறது. 2026 முதல் 2029 முடிய 3 ஆண்டுகளுக்கான வாரச்சந்தை மற்றும் சாலையோர கடைகளில் தினசரி சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் 2-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
செயல் அலுவலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், துணைத் தலைவா் தனபால், வாா்டு உறுப்பினா்கள் மற்றும் ஊா் மக்கள் சந்தை வியாபாரிகள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10 லட்சம் வீதம் 4 போ் டெபாசிட் தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனா்.
நிா்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையை விட கூடுதலாக யாரும் ஏலம் கோராததால் மறுதேதி குறிப்பிடாமல் செயல் அலுவலா் ரவிசங்கா் 2-ஆவது முறையாக ஏலத்தை ஒத்தி வைத்தாா்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

நாட்டறம்பள்ளியில் பறக்கும் படை சோதனை. ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பறிமுதல்

செந்தாரப்பட்டியில் பேரூராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டதால் பரபரப்பு

நாட்டறம்பள்ளி தினசரி, வாரச்சந்தை ரூ.26.47 லட்சத்துக்கு ஏலம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


