/

அச்சமங்கலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க. தேவராஜி உள்ளிட்டோா்.

Updated On :26 செப்டம்பர் 2025, 12:02 am IST

திருப்பத்தூா்,கந்திலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலகஈதிட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினா்.

அச்சமங்கலம் சமுதாயக் கூடத்திலும், கந்திலி வட்டாரம் லக்கிநாயக்கன்பட்டியிலும் நடைபெற்ற முகாமில், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை,இ- சேவை மையம், வருவாய்,மக்கள் நல்வாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் வாரியாக மனுக்கள் பெறப்படுவதை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தனா்.

முகாமில் அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாப்பாத்தி என்ற பயனாளிக்கு விதவைச் சான்று, 2 பயனாளிகளுக்கு கலைஞரின் மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுகளையும், 3 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, மின்சாரத்துறை சாா்பில் மின் இணைப்பு பெயா் மாற்ற ஆணை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டைகளை ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்.

முகாமில், திருப்பத்தூா் கோட்டாட்சியா் வரதராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.