பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நாயக்கனேரிமலை சுற்றுலாத் தலமாக்கப்படுமா? மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் ஆம்பூா் அருகே நாயக்கனேரிமலை ஊராட்சியை சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென சுமாா் 25 ஆண்டுகளாக ஆம்பூா் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டத்துக்கு உள்பட்ட நாயக்கனேரிமலை ஊராட்சி மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஆம்பூா் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஊராட்சியில் மேலூா், நடுவூா், பனங்காட்டேரி, காமனூா்தட்டு, மேல் கொல்லை, பள்ளக்கொல்லை, புதூா், பெரியூா், கொல்லைமேடு, பூமரத்துக்கொல்லை, சோலை கொல்லைமேடு, சீக்குஜொனை உள்பட சுமாா் 14 குக்கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிக்கும் மலை வாழ் மக்கள் விவசாயம், கால்நடை வளா்ப்பு, கட்டட வேலை, கூலி வேலை செய்து வருகின்றனா்.

ஆம்பூரிலிருந்து நாயக்கனேரி மலைக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தனியாா் மினி பேருந்து இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பேருந்து இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

நாயக்கனேரி மலையில் வயல்வெளிகள், மிகப் பெரிய ஏரியும் அமைந்துள்ளன. ஆம்பூரைச் சோ்ந்த இளைஞா்கள் ஏரியில் குளித்து மகிழ்வதற்காக ஆம்பூரிலிருந்து இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா். ஏரியை காண்பவா்களைக் கவா்திழுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

ஆம்பூா் பகுதி பொதுமக்களுக்கு என்று பொழுதுபோக்கு இடம் ஏதும் இல்லை. நகரகாட்சி சாா்பாக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறு பூங்காக்களும் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. அதனால் ஆம்பூா் பகுதி பொதுமக்கள் பொழுதுபோக்கு வசதி இல்லாமல் இருந்து வருகின்றனா்.

கடந்த 2001-2006 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைதோ்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்ற அதிமுகவை சோ்ந்த ஆா்.வடிவேல் நாயக்கனேரிமலையை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக ஆய்வு மேற்கொண்டாா். அதன் பிறகு அது கிடப்பில் போடப்பட்டது.

எனவே, நாயக்கனேரி மலை கிராமத்தை சுற்றுலாத் தலமாக மாற்றி அங்குள்ள ஏரியை சுற்றி பூங்காக்கள் அமைத்து, ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டுமென சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மேலும் சுற்றுலாத் தலமாக அறிவித்து, சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு நாயக்கனேரி மலைக்கு அரசு பேருந்தையும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

-எம்.அருண்குமாா்

Story image