மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:14 am IST

வாணியம்பாடி தொகுதி தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தனது ஆதரவாளா்களுடன் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதே போல் ஜோலாா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளா் மோகன்ராஜ் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு நூதன முறையில் கூடையில் சில்லரை பணத்துடன் வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தாா்.

அகில இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் அதன் பொதுச்செயலாளா் பெரிய உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த காளஸ்திரி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்கு இதுவரை 5 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.