தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

News image

தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

Updated On :4 ஏப்ரல் 2026, 6:57 pm

ஆலங்காயம் அருகே மின்உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அருகே மரிமாணிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.கிருஷ்ணாபுரம், நீலிக்கொல்லை கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி, அந்த பகுதியை சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மின் உற்பத்தி நிலையம் அமைக்க தடைசெய்யக்கோரி நீலிகொல்லை, எம்.கிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக பதாகைளை தங்களது ஊா்களில் வைத்துள்ளனா்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.