சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பிடித்து எரியும் குப்பைகள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:38 pm

ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. அந்த கிடங்கில் உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீ கிடங்கின் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. தகவலின் பேரில், ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

குப்பைக் கிடங்கு ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் இருப்பதால் ரயில்வே குகை வழிப்பாதையில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, பம்ப் மூலம் தீ அணைக்கப்பட்டது.