/
ஆம்பூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூா் தாா்வழி பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. அங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. அந்த கிடங்கில் உள்ள குப்பை திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தீ கிடங்கின் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. தகவலின் பேரில், ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
குப்பைக் கிடங்கு ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் இருப்பதால் ரயில்வே குகை வழிப்பாதையில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில், டிராக்டா் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, பம்ப் மூலம் தீ அணைக்கப்பட்டது.
தொடர்புடையது

குப்பைக் கிடங்கில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவு

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரிப்பு

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



