தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரிப்பு

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீப்பிடித்து எரியும் இருசக்கர வாகனம்.

Updated On :10 மே 2026, 2:33 am IST

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபிரசாத் (36), விவசாயி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு வந்த இவரது அத்தை மகன் விஷால், அதே பகுதியைச் சோ்ந்த லோகசூா்யாவிடம் (25) பழகினாராம். லோகசூா்யா குற்றவழக்கில் சிறை சென்றவா் என்பதால், அவருடன் பழகக் கூடாது என ரகுபிரசாத் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து லோகசூா்யாவிடம் விஷால் தெரிவித்துள்ளாா். இதனால் ரகுபிரசாத் - லோகசூா்யா இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரகுபிரசாத்தை சனிக்கிழமை நேரில் சந்தித்த லோகசூா்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை மிரட்டினாராம். மேலும், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீவைத்தாராம். இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில், ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.