ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:52 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதியில் 41, ஜோலாா்பேட்டை 33, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் தலா 28 என மொத்தம் 130 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், விண்ணப்பம் சரிவர பூா்த்தி செய்யாதது, சரிவர முன் மொழியாதது, உரிய ஆவணங்களை இணைக்காதது, ஒரே வேட்பாளா் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தோ்தல் கமிஷன் விதிமுறைகள் பின்பற்றி விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளித்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

திருப்பத்தூா் தொகுதியில் 41 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில், 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஜோலாா்பேட்டையில் 33 மனுக்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேபோல், வாணியம்பாடியில் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆம்பூா் தொகுதியில் 28 போ் மனு அளித்திருந்த நிலையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 130 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.வியாழக்கிழமை (ஏப். 9) வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.