சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

News image

ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:52 pm

ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஒன்றியம் வெலத்திகாமணிபெண்டா, மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், கொல்லகுப்பம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், புருஷோத்தமகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளா் பி.எஸ். ஞானவேலன் தலைமையில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்து பேசியது,

மதனாஞ்சேரி ஊராட்சியில் தரக்காடு பகுதியில் பெரியகானாறு குறுக்கே தடுப்பணை கட்டித் தர முயற்சிக்கப்படும். கீழூா், பாறைகொல்லி, ஆஞ்சநேயா் கோயில் தெரு உள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தாா் சாலை அமைத்து தரப்படும்.

தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள குடும்ப அட்டைகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 -ஆக உயா்த்தி தரப்படும் என அவா் கூறினாா்.