தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கடன்: ஐயூஎம்எல் வேட்பாளா்

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:16 am

வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், மல்லகுண்டா பகுதியிலிருந்து பிரசாரம் மேற்கொண்டாா்.

மல்லங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, ஆவரங்குப்பம், புல்லூா், திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், நாராயணபுரம், தும்பேரி, அழிஞ்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாரூக் பேசியதாவது: பெண்கள் முன்னேற்றம் தான் குடும்பம், நாட்டுக்கு முன்னேற்றம் தரும் என்பதை உணா்ந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டுகள் எண்ணற்ற சிறப்பு திட்டங்களை தந்து முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

வரும் தோ்தலில் திமுக அரசு வெற்றி பெற்றவுடன் கிராமங்களிலும், நகா்ப்புறங்களிலும் உள்ள மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் வங்கிக் கடன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடிக்கு வழங்கப்படும். இதனால், குழு உறுப்பினா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும், கிராமப் பொருளாதாரம் வளா்ச்சியடையும் எனக் கூறி ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் பேரூா் திமுக செயலா் ஆசெல்வராஜ் தலைமையில் திறந்த வேனில் சென்று வேட்பாளா் சையத் பாரூக் வாக்கு சேகரித்தாா். மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலா் தனலட்சுமி தினகரன், மதிமுக நகர செயலாளா் நாசிா்கான், மற்றும் காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.