யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மாதனூா் ஒன்றிய பகுதியில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

News image

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 4:05 am IST

மாதனூா் ஒன்றிய பகுதியில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளருமான அ.செ.வில்வநாதன் கதவாளம், மோதகப்பல்லி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியது, வேளாண்மைக்கு ஆதரமான நீரை சேமிக்க நுண்ணீா் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும். உழவா்கள் பயிா் செய்து மகசூரை அடைவதற்காக கிராம அளவில் பயிா் சாகுபடி திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.

தரிசு நிலங்கள், மண் வளம் குன்றிய 1.25 லட்சம் ஏக்கா் நிலங்கள் மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்படும். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கிட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். 5000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1000 சூரிய சக்தி உலா்த்திகள், 1000 சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்படும்.

மூலிகை பயிா் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைகள் விதைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.