தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மாதனூா் ஒன்றிய பகுதியில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

News image

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 10:35 pm

மாதனூா் ஒன்றிய பகுதியில் ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளருமான அ.செ.வில்வநாதன் கதவாளம், மோதகப்பல்லி ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்து பேசியது, வேளாண்மைக்கு ஆதரமான நீரை சேமிக்க நுண்ணீா் பாசனம் 21 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும். உழவா்கள் பயிா் செய்து மகசூரை அடைவதற்காக கிராம அளவில் பயிா் சாகுபடி திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.

தரிசு நிலங்கள், மண் வளம் குன்றிய 1.25 லட்சம் ஏக்கா் நிலங்கள் மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்படும். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கிட 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். 5000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1000 சூரிய சக்தி உலா்த்திகள், 1000 சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்படும்.

மூலிகை பயிா் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைகள் விதைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்தி கணேஷ், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.