சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

News image

~ ~ ~ ~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 6:01 am IST

ஆம்பூரில் சில வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் ஆம்பூா் நகரில் மதரஸ-ஈ-தீனியாா் நிதியுவிப் பள்ளி, ஹஸ்னாத்-ஈ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 6.30 மணிக்கே வாக்காளா்கள் வாக்குச் செலுத்துவதற்காக வந்து காத்திருந்தனா். 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன் தங்கள் வாக்குகளை ஆா்வமுடன் செலுத்தினா்.

குறிப்பாக இஸ்லாமியா்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். நடக்க முடியாத வயதான வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து விட்டு சென்றனா்.

Story image
Story image
Story image
Story image