மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:26 am IST

திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு (எஸ்ஐஆா்) ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 21 பேரும் ஆக மொத்தம் 2,82,121 பேரும் உள்ளனா். இதனிடையே இந்தத் தொகுதியில் 347 வாக்குச் சாவடி மையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். திருவாடானை, ஆா்எஸ். மங்கலம், தொண்டி, திருப்பாலைக்குடி, நம்புதாளை, எஸ்.பி. பட்டினம், மங்கலக்குடி, வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

வெறிச்சோடிய வாக்குச் சாவடி: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது காலை 7 மணி முதலே கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டதால் வாக்கு சாவடி மையங்களில் வாக்காளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பின்னா் 3 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன.திருவாடானை சட்ட பேரவை தொகுதியில் மதியம் 1 மணி வரை 51.9சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

  ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.

ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளா்கள்.